2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பகிடிவதைக்கு எதிரான விதியை அமைச்சர் தவறாக பயன்படுத்துகிறார்-பல்கலை மா.ஒ

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்னா பரனமான்ன)

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க பகடிவதைக்கெதிரான விதியை, மாணவர்களை பழிவாங்கும் வகையில், தவறாக பயன்படுத்தி வருகிறார் என அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் அமைப்பாளரான உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் பொய்க்குற்றச்சாட்டப்பட்டு வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
                                                           
மாணவர்கள் அமைச்சரின் வருகைக்கு அமைதியான வகையில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தனியார் பல்கழைக்கழகங்களை முதலாவது காரணமாகும். ஏற்கெனவே திறக்கபட்டு மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினி ஆயுதக் கூட்டத்தை திறந்து வைப்பதாக கூறிக்கொண்டு அமைச்சர் வந்தமை இன்னொரு காரணமாகும்.

அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாணவர்களை சீண்டியதால்தான் குழப்பம் ஏற்பட்டது. மாணவர்கள் இதனால்தான் அமைச்சருக்கு கூக்காட்டினர். இதுதான் நடந்தது. மாணவர்கள் அமைச்சரை ஒருபோதும் மறித்து வைத்திருக்கவில்லை.

பேராதனை பல்கழைக்கழக மாணவர் சங்க தலைவர் டினுக செனிவரட்னவும் செய்தியாளர் மாநாட்டில் பேசினார். போலிக் குற்றச் சாட்டிலிருந்து கைது செய்யப்பட்ட தோழர்கள் விடுவிக்கப்படும்வரை எமது மாணவர்கள் சங்க போராட்டம் தொடரும்.

இன்று நாம் அடையாள வகுப்பு பகிஷ்கரிப்பை நடத்தவுள்ளோம். 4 மாணவர்கள் கைது செய்யப்ட்டதை கண்டித்து ஆர்பாட்ட ஊர்வலம் நடைபெறும் என அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .