2025 ஜூன் 25, புதன்கிழமை

கொழும்பு மேயர் முஸம்மில் நவம்பர் வரை கடமைகளை பொறுப்பேற்க முடியாத நிலை

Super User   / 2011 ஒக்டோபர் 18 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)
கொழும்பு மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏ.ஜே.எம்.முஸம்மில் எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை கடமைகளை பொறுப்பேற்க முடியாது என கொழும்பு மாநகர சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளராக கடமையாற்றும் ஒமர் காமில் எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை பணியாற்றுவார் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜெயதிலக்க தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகியன புதிய மாநகர சபைகளாக விசேட வர்த்தமானி மூலம் ஸ்தாபிக்கப்பட்டமையினாலேயே இவற்றின் புதிய ஆட்சி காலம் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியே ஆரம்பிக்கப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஏனைய 21 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (17) முதல் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Ossan Salam - Doha Wednesday, 19 October 2011 04:03 PM

    அப்போ நிகாஹ் முடிஞ்சுது மாப்பிள்ளை பெண்ணைக் கரம் பிடிக்க இன்னும் ரெண்டு வாரங்கள் காத்திருக்கணும் அப்படித் தானே.

    Reply : 0       0

    siraj Wednesday, 19 October 2011 04:25 PM

    இது
    என்ன
    கொடுமை

    Reply : 0       0

    xlntgson Wednesday, 19 October 2011 08:40 PM

    சட்டச் சிக்கல்?

    Reply : 0       0

    ashqar Thursday, 20 October 2011 01:30 AM

    பொறுத்திருந்தார் நாட்டை ஆள்வார்.

    Reply : 0       0

    நண்பன் Friday, 21 October 2011 02:55 AM

    சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மை தானே இப்ப நாம்.

    Reply : 0       0

    Koduma Friday, 21 October 2011 08:12 PM

    என்ன கொடும சார்

    Reply : 0       0

    aslam Monday, 24 October 2011 11:44 PM

    நாளை நமதே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .