Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 26 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்.எம்.பௌஸான்)
"ஹஜ் பெருநாள் தினங்களில் மாடுகளை அறுத்துப் பலியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனை விஷேடமாக நிறைவேற்றுங்கள். ஆனால் கன்றுக் குட்டிகள், பசுக்கள், எருமைகள் போன்றவற்றை கொல்ல வேண்டாம் . குர்பான் செய்யப்படும் மாடுகளை வதை செய்யாமல் அறுத்து, உங்களுடைய கடமையை செய்யலாம்' என மக்கள் தொடர்பாடல் மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா இன்று தெரிவித்தார்.
'எச்சந்தர்ப்பத்திலும் மாடுகள் வதை செய்யப்படாது உரிய முறையில் அறுக்கப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் அதை தடுத்து நிறுத்த நான் தயங்க மாட்டேன்' எனவு ம் அவர் கூறினார்.
இன்று பிற்பகல் மல்வானையில் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற குர்பான் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் இது குறித்து தொடர்ந்து கூறு கையில்,
"நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்பதற்காக அதனை தடுத்து நிறுத்த முடியாது. அதனை உண்பவர்கள் இருக்கின்றனர். மக்கள் தொடர்பு அமைச்சர் என்ற வகையில் மக்கள் உணர்வுகளுக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதி மதங்களுக்கு விலங்கு போடும் தலைவரல்ல மாறாக, சுதந்திர நாடு என்ற வகையில் நாம் சகலரும் ஒன்றாக இருக்கின்றோம்.
முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் . இதனால் தான் சதாம் ஹூஸைன் கொலையின்போது நாம் குரல் எழுப்பினோம். இன்று கடாபி போன்றவர்களை மிலேச்சத்தனமாக வெள்ளையர்கள் கொன்றனர் ஆனால் நாம் அதுபோன்றல்ல. நாம் ஒற்றுமையானவர்கள் . உலகம் எமது நாட்டைத் தாக்கும் போது எமக்கு உதவியவர்கள் முஸ்லிம் தலைவர்கள்.
இன்று வத்தளை போன்ற பகுதிகளில் மாடுகள் தகாத முறையில் வதை செய்யப்பட்டு கொல்லப்படுகின்றன. இவற்றை நான் நிறுத்தினேன். அந்த மாடுகளை விடுவித்தேன்.
எனவே மாடுகளை அறுக்காமல் ஆடுகள் அறுக்க முயற்சிக்குமாறு நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். தேவை ஏற்படுமானால் ஒட்டகங்களைக்கூட இறக்குமதி செய்ய தயாராக இருக்கிறேன்.
என்றாலும் எல்லோராலும் விலைகொடுத்து ஆட்டிறைச்சி உண்ண முடியாது. எனவே எதிர்வரும் ஹஜ் பெருநாள் தினங்களில் உங்களது கடமையை தாராளமாக நிறைவேற்றலாம். இதனைத் தடுக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.
எச்சந்தர்ப்பத்திலும் மாடுகள் வதை செய்யப்படாது உரிய முறையில் அறுக்கப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் அதை தடுத்து நிறுத்த நான் தயங்க மாட்டேன்" என்றார்.
இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர், நீர்கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் சகாவுல்லா தொழிலதிபர் இஸ்மாயில் ஹாஜியார், லாபிர் ஹாஜிர் மற்றும் முஸ்லிம் சமூக அமைப்புகளது பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Mohammed Hiraz Thursday, 27 October 2011 07:07 PM
மாட்டின் மேல் இவ்வளவு பாசம் உள்ள நீங்கள் மாட்டு பாலை கற கற என கறந்து முழு தேசத்தவரும் அருந்துவதை பார்த்துகொண்டு சும்மா இருக்கிறீர்களே. பாவம் பசுவின் கன்றுகல்லோ பசு பால் சுறக்கிறது? கன்றை ஏமாற்றி புள்ளை திண்ண கொடுத்துவிட்டு இப்படி பசுவின் கன்றுக்கு அநியாயம் செய்து நாட்டவர் பசுபால் அருந்துவதை பார்துகொண்டு சும்மா இருக்கிறீர்களே தலைவா இது நியாயமா??? தாய்பாலை அவர்களது குழந்தைகளுக்கு கொடுக்காது குழந்தைகள பிஸ்கத்தை கொடுத்து ஏமாற்றி விட்டு அந்த தாய்ப்பாலை கறந்து எவனோ விற்று வியாபாரம் நடத்தினால் உங்களுக்கு எப்படி கோபம் வரும்? இதனை அனுமதிக்கவே மாட்டீர்களே தலைவா? அப்படி இருக்க, வாயில்லா ஜீவனாகிய கன்று குட்டிமேல் மட்டும் ஏன் இன்னும் இரக்கம் பிறந்து அதற்கு நேரும் அநியாயத்தை தடுத்து நிறுத்தாமல் இருக்கிறீர்களே.
Reply : 0 0
GM Thursday, 27 October 2011 03:22 PM
எப்படி தொழுவது எண்டும் சொல்லி தருவர் போல.
Reply : 0 0
sagotharan Thursday, 27 October 2011 04:31 PM
sakeenaவின் கருத்துக்கு வாழ்த்துக்கள். ம இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை. மேர்வினை கொண்டு இஸ்லாத்தை பலப்படுத்த வேண்டிய எந்த தேவையும் இறைவனுக்கு இல்லை. சத்தியத்தை கொண்டு அதை இறைவன் எப்பதோ பலப்படுத்தி விட்டான். எமக்கு அருளப்பட்டதை உரியவாறு தயவு தாட்சண்யமின்றி நாம் எடுத்துரைத்தால் வெற்றி அண்மையில் உள்ளது. இன்ஷா அல்லாஹ்.
Reply : 0 0
maazeen Thursday, 27 October 2011 04:31 PM
என்னங்கடா இது புதுசா இருக்கு. இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம். எனவே நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை மேர்வின்.
Reply : 0 0
Ullam Thursday, 27 October 2011 04:44 PM
மனிதனுக்கு இறைவன் கொடுத்த சுதந்திரத்தை சக மனிதன் பறிக்கிறான்.....
Reply : 0 0
mbm Thursday, 27 October 2011 05:21 PM
எங்களுக்கு, இஸ்லாம் சொல்லாத ஒன்றை, நபி அவர்கள் வழிகாட்டாத ஒன்றையா இந்த ... அமைச்சர் சொல்லிவிடபோகிறார்? முதலில் இவர் மனித வதையை நிறுத்தட்டும். அதுக்கப்புறம் வேண்டுமானால் விலங்குகளின் மீதான பாசத்தை பொழியட்டும். ஒருவேளை விலங்குகள்தான் அடுத்த தேர்தலில் இவருக்கு வாக்கு போடுமோ???
Reply : 0 0
Ifthicar Thursday, 27 October 2011 06:08 PM
கூர்மையான கத்தியினால் தக்பீர் சொல்லி ஆடுகளை அறுத்து பலியிடுவார்கள் முஸ்லிம்கள் ஜீவகாருன்யமிக்கவர்கள்.
Reply : 0 0
Rusaith Thursday, 27 October 2011 06:13 PM
அது எங்களுக்கு தெரியும் உங்களுடைய வேலையே மட்டும் பாருங்கள்.
இறைவனின் துதுவர் எங்களுக்கு அதைப் பற்றி நிறையவே சொல்லி தந்திருக்கிறார்கள்.
Reply : 0 0
riswan Thursday, 27 October 2011 06:51 PM
மேர்வின் சில்வா என்ன இஸ்லாமிய போதகரா ஆகிட்டாரா ...?
Reply : 0 0
சிறாஜ் Thursday, 27 October 2011 01:15 PM
மே,,,,,,,,,,,,,,,,, மே.................. வின் சில்வா வை கூப்பிட்டால் வீட்டில் உள்ள ஆடு ஓடி வருது. அப்படின்னா ஏதோ சம்திங்க்...........
Reply : 0 0
xlntgson Thursday, 27 October 2011 07:43 PM
குர்பான் மிருக வதை அல்ல. குர்பானுக்காக கொடுக்கப்படும் விலங்குகள் வதை செய்யப்படுவது அல்லது வதை செய்வது அனுமதிக்கப்படாது. கத்தியைக் கூட அம்மிருகத்தின் முன்னால் தீட்டக்கூடாது என்று இருக்கிறது. கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கவும் கூர்மையான கத்தி அவசியம் மின்னல் வேகத்தில் அறுக்க. அது அம்மிருகத்துகத்துக்கு வதையாக இருக்குமென்று வாதாடுவோர் மயக்க மருந்தைக் கொடுக்கவேண்டும் என்பார்கள். ஆனால் மருத்துவர்களுக்கு கூட மூளையில் என்ன நடக்கிறது எவ்வளவு துன்பத்துடன் உயிர் பிரிகிறது என்றறிய சாதனம் இல்லை, மயக்கம் கூட.
Reply : 0 0
ala Thursday, 27 October 2011 09:29 PM
இதை மேர்வின் சில்வா சொல்ல வேண்டியது இல்லை. இவர் கூட்டத்துக்கு போகும் முன்னர் யாரோ ஒரு முஸ்லிம் மௌலவி சொல்லிக்கொடுத்து இருப்பார் போல உள்ளது. மாடுகளை வதை செய்யாமல் அறுத்து குர்பான் கொடுங்கள் என்று. ஏனெனில் இவை தானே குரான் ஹதீஸில் சொல்லபட்டுள்ளதே இவர் சொல்லி பயன் இல்லை.
Reply : 0 0
nila Thursday, 27 October 2011 11:34 PM
நங்கள் ஒரு மாட்டை அறுத்து நூற்றுக்கணக்கானோர் சாப்பிடுகிறோம். அது ஒரு உயிர். நீங்கள் ஒரு வேலை சாப்பாட்டிற்கு நூறு நெத்தலி மீன்களை கொல்ரிங்கலாமே !எது சார் பெரிசு ? ஒன்றா ? நூறா ??? உயிர் என்றால் எல்லாம் உயிர் தான். பிறகென்ன ஆட்டைக்கொல்லலாம்ம் .....மாட்டைக் கொல்லக்கூடாது? சும்மா போங்க சார்.
Reply : 0 0
ali abdullah Thursday, 27 October 2011 11:37 PM
சார், பன்றி அறுப்பது அது வதை இல்லையா சார்? அப்படி என்றால் மீன் உண்பதும் கூடாது சார். எங்க சார் படிச்சீங்கள் மாடு அறுப்பது மட்டும் மிருக வதை என்று . ஓட்டகம் இறக்குமதி செய்யலாம் . ஆடு அறுக்கலாம். ஆனா மாடு மட்டும் அறுக்க முடியாதா சார்? நாட்டின் சட்டத்தை மதிச்சி நடங்கள் சார்,
Reply : 0 0
mtmsiyath Friday, 28 October 2011 03:03 AM
இஸ்லாம் மார்க்கமே உயிர்களிடத்தில் அன்பு கட்டுமாறு கூறிவுள்ளது.
Reply : 0 0
SSS Friday, 28 October 2011 04:43 AM
அப்படியென்றால் கோழி தின்ன வேண்டாம்
Reply : 0 0
xlntgson Friday, 28 October 2011 08:53 PM
பிழை திருத்தம்: எனது மேற்சொன்ன கருத்தில் 'மயக்கம் மிருகங்களுக்கு மட்டுமல்ல மருத்துவர்களுக்கும்', என்று முடிந்திருக்கவேண்டும்! எழுத்தெண்ணி கருத்தை சொல்லும் போது முடிவு சற்று சுருக்கமாக சுருக்கமாக விளக்கம் குறைய வாய்ப்புண்டு. இதை நான் பல முறை அவதானித்து இன்று குறிப்பிடுகின்றேன் இப்போது! நடுநிலையாக எழுதவேண்டும் என்பதாலும் ஒரு கேள்விக்குறியில் நிறுத்த வேண்டியதுள்ளது குழம்பின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க. ஆசிரியர் குறை அல்ல. எனது குறையை சுட்டிக்காட்டுவோருக்கு நான் நன்றி கடன் பட்டவன். நன்றி தமிழ் மிரருக்கு.
Reply : 0 0
சிறாஜ் Thursday, 27 October 2011 01:17 AM
நல்ல சிரிப்பா இருக்கே. மக்கள் தொடர்பு அமைச்சர் என்றால் எத்தனையோ மக்கள் பட்டினியுடன் இருக்கிறார்கள், அதனைப்போய் பார்க்காமல், மாட்டையும் ஆட்டையும் கழுதையையும் பார்த்து திரிவது என்ன .................
கடமையச்சரியாக செய்யுங்கோ அமைச்சரே. மனிதனை வதை செய்கிறான், வீதியில் போட்டு அடிக்கிறான், கட்டிவைக்கிறான், அதனைப் பார்க்க வேண்டாம்? மிருகத்துடன் இருக்கும் அன்பை மனிதனுக்கும் காட்டலாம் அல்லவா?
Reply : 0 0
roomy Thursday, 27 October 2011 10:25 AM
இது கொழும்பு மேயர் தோல்வியின் பின்னால் ஏவப்பட்ட 'மேர்வின் ' எனும் இன்னுமொரு அம்பு......... இதற்கு உலக நாடுகள் தான் பதில்சொல்ல வேனும்.... ஆனா .....விரைவில் நாப்பது வருடங்களுக்குப் பிறகு அல்ல.....
Reply : 0 0
Vj Thursday, 27 October 2011 06:30 AM
அப்போ ஆடு, ஒட்டகம் பாவம் இல்லையா? No common sense at all….
Reply : 0 0
Jawahir Saly Thursday, 27 October 2011 05:31 AM
குர்பான் எப்படிக் கொடுப்பது மாட்டை எப்படி அறுப்பது என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். நீங்கள் சொல்லித் தரத் தேவையில்லை. குர்பான் என்றாலே அதில் வதை இல்லை என்பதுதான் மறைவான அர்த்தம். இதில் இவரின் ஆலோசனையை கேட்க உங்களுக்கு வெட்கம் இல்லையா? முஸ்லிம் என்ற அந்தஸ்தை காப்பாத்துங்கள்.
Reply : 0 0
azhar Thursday, 27 October 2011 05:29 AM
அவருக்கு ஒரு இஸ்லாம் கிளாஸ் நடத்த வேண்டும். உல்ஹியா கடமையை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் சொல்லி இருக்குது எண்டு.. சில வேளை அவர் முஸ்லிம் ஆகவும் மாறலாம் அதை நன்றாக படித்து விட்டு.
Reply : 0 0
mareen Thursday, 27 October 2011 04:25 AM
சிங்கப்பூரில் இருந்து எப்போது இவர் திரும்பிவந்தார்?
Reply : 0 0
nawas Thursday, 27 October 2011 04:21 AM
வந்துட்டாய்யா !! வந்துட்டாய்யா ! இவர் தான் எங்களுக்கு மிருக வதை பற்றி சொல்லனுமா? முதல்ல மனித வதையா நிறுத்தவும். அப்புறமா மிருக வதைய பார்ப்போம் !!!
Reply : 0 0
sakeena Thursday, 27 October 2011 04:06 AM
குர்பான் கொடுப்பது பற்றி மேர்வின் தீர்மானிப்பதா...வெக்கமா இல்ல உங்களுக்கு...? ரியாஸ் உங்களின் பெயருக்கு முன்னாள் கம்பீரமான முஹம்மத் [ஸல்] அவர்களின் பெயருள்ளது, மறந்து விடாதீர்கள்....முன்னேஸ்வரத்துக்கு மேர்வின் போனா நாங்க பயந்து குர்பான நிறுத்திடுவோமா...?
Reply : 0 0
majees Thursday, 27 October 2011 04:06 AM
அமைச்சர் மேர்வின் சில்வாவோடு ஏன் முஸ்லிம் பிரதிநிதிகள் குர்பான் சம்மந்தமாக கலந்துரையாட வேண்டும். இதற்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?
Reply : 0 0
meenavan Thursday, 27 October 2011 03:53 AM
நீங்கள் மக்கள் தொடர்பு அமைச்சரா? மாக்கள் தொடர்பு அமைச்சரா? நீங்கள் மனிதனை மரத்தில் கட்டி வைத்தீர்கள் அது வதையாக தெரியவில்லை? பொதுமகனை கன்னத்தில் அறைந்தீர்கள் அது உங்களுக்கு சுவையாக இருந்திருக்கும்? மாடு என்ற சொல்லை கேட்டாலே எகிறி குதிக்கிறீங்க. அது ஏன்?
Reply : 0 0
Jabeer HM Thursday, 27 October 2011 02:57 AM
பிரமாதம்.
Reply : 0 0
mohamed riyas Thursday, 27 October 2011 02:55 AM
யா அல்லாஹ், மேர்வின் சில்வாவிற்கு ஹிதாயத்தை வழங்குவாயாக, அவரை கொண்டு இஸ்லாத்தை பலப்படுத்துவாயாக!
.ஆமீன் .
Reply : 0 0
Lulzbot Thursday, 27 October 2011 02:13 AM
அக்பருக்கு பீர்பால் போல, கிருஷ்ணதேவராயருக்கு தெனாலிராமன் போல, நம் மகிந்தவுக்கு மேர்வின்!
Reply : 0 0
jaleel kwt Thursday, 27 October 2011 02:07 AM
அங்க கடித்து இங்க கடித்து கடைசில் முஸ்லிம்களின் பக்கம் அடி. இது நல்லதுக்கு அல்ல....
Reply : 0 0
KLM Thursday, 27 October 2011 01:56 AM
முக்கிய கேள்வி இதுதான். அமைச்சர் மேர்வின் சில்வா அனுமதிக்காவிட்டால் முஸ்லிம்கள் குர்பான் கொடுக்க முடியாதா? அவரிடம் அனுமதி பெற வேண்டுமா?
Reply : 0 0
Nakeel Thursday, 27 October 2011 01:24 AM
என்ன நடந்தது அமைச்சருக்கு? ஆச்சரியமாயிருக்குதே. குர்பான் கொடுக்க எத்தகைய விலங்குகள் தேவை, eppadi வதை seiyaamal aruppathu enpathellaam eppavao islaam valikaattivittathu. ivar periya appa, velakkam solraar. muslimkalin nanpanaam. muslim samoorthikkaarana kattivachchappo musleemkaLin ethiriyaamaa?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago