2025 ஜூன் 25, புதன்கிழமை

கொழும்பு மாநகரசபை அறைகளை பலவந்தமாக கையகப்படுத்தியமைக்கு மேயர் முஸம்மில் கண்டனம்

Super User   / 2011 நவம்பர் 04 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

கொழும்பு மாநகர சபையின் அறைகளை  சபையின் எதிர்க்கட்சியான ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலவந்தமாக கையகப்படு;த்தியதாகவும் இதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தன்னுடன் கலந்துரையாடியிருந்தால், சபையின் அங்கீகாரத்தின் பின்னர் மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவருக்கு அறையொன்றை வழங்கியிருக்க முடியும் எனவும் அவர் கூறினார். எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் இப்படி கொடூரமாக நடந்துகொள்ளக்கூடாது எனவும் அவர் கூறினார்.

கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி, எதிரக்;கட்சி உறுப்பினர்கள் 6 பேர் வந்து சாவிகளை கொண்டு சென்றதாக மேயர் முஸம்மில் தெரிவித்தார். நேற்று ஆறு உறுப்பினர்கள் அடியாட்களுடன் வந்து மாநகரசபையின் பயிற்சி அறையின் கதவை திறந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0

  • zaro Sunday, 06 November 2011 01:59 AM

    இதுக்கு அரசு உடந்தையா சார்? இது என்ன கொடுமையப்பா...

    Reply : 0       0

    chelvin Sunday, 06 November 2011 03:59 AM

    என்ன அதிசயயப்பட ! காட்டு சட்டம் மேல் ஓங்கி நிற்கிறது காலம் தான் பதில் சொல்லனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .