Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 06 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தமித் விக்கிரமசேகர)
பெரும் எண்ணிக்கையான முச்சக்கர வாகங்கள் கடந்த சில மாதங்களில் இலங்கை வீதிகளில் பாவனைக்கு வந்துள்ளதாலும் பல கார் டெக்ஸி சேவைகள் மற்றும் மீற்றர் டெக்ஸி முச்சக்கரவாகன சேவைகளின் அறிமுகத்தாலும் தமது தொழில்வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வாகன சாதரதிகள் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வாகன சாரதிகள் பலர் ஏற்கெனவே வேறு தொழில்களைத் தேடத் தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் சண்டே டைம்ஸுக்குத் தெரிவித்தனர்.
மோட்டார் வாகன பதிவாளரின்படி கடந்த 10 மாதகாலத்தில் 112, 433 முச்சக்கர வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதாவது 10 மாதகாலத்தில் தினமும் சாராசரியாக 375 முச்கரவாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த வருடம் முழுவதும் 85,648 முச்சக்கர வாகனங்களே பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 25 வருடங்காக முச்சக்கர வாகன சாரதியாக தொழில்புரிந்துவரும்ஜே.எச். ரோஹன (42) என்பவர் இது தொடர்பாக கூறுகையில், "புறக்கோட்டையில் நான் எனது முச்சகக்கர வாகனத்தை இயக்கியபோதிலும் 'ஹயர்' ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு இப்பொது இருமணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. முன்னர் வீட்டுச்செலவுக்கு 800 ரூபாவை கொண்டுசெல்வேன். இப்போது அது 400 ரூபாவாக குறைந்துள்ளது. தினமும் நான் முச்சக்கர வான உரிமையாளருக்கு 350 ரூபாவை செலுத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
"காலையில், காலை உணவுக்குப் பணம் தேடுவதற்காக 'ஹருக்கு' காத்திருக்க வேண்டியுள்ளது. சில வேளை பல மணித்தியாலங்களும் காத்திருக்க வேண்டும். எரிபொருள் விலையேற்றமும் எம்மை பாதிக்கிறது. மீற்றர் டெக்ஸிகள், 'கெப்' சேவைகள், என்பனவும் சாதாரண முச்சக்கர வாகன சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன" எனவும் அவர்கூறினார்.
நாமல் பிரசன்ன என்பவர் இது தொடர்பாக கூறுகையில், வேறு காரணங்களாலும் வாடிக்கையாளர்கள் மீற்றர் டெக்ஸிகளை விரும்புவதாக கூறினார்.
"தேவையேற்பட்டால் பின்னர் இனங்காணக்கூடிய முச்சக்கர வாகனங்களை பயணிகள் சௌகரியமாக கருதுகின்றனர். பெரும்பாலான மீற்றர்டெக்ஸி சாரதிகள் தமதுதொலைபேசி இலக்கத்தையும் வழங்குகின்றனர். எனவே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அம்முச்சக்கர வாகனங்களை தேடிப்பிடித்துக்கொள்ள முடியும்" என்றார்.
எனினும் அதிக எண்ணிக்கையான முச்சக்கர வாகனங்கங்கள் நகரில் இருப்பதே வருமானம் இழப்புக்கு முக்கிய காரணம் என அவர் கூறினார்.
மீற்றர் டெக்ஸிகள் குறுகிய தூரங்களுக்கு ஓடினால் நஷ்டத்தை எதிர்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் மீற்றர் டெக்ஸி இயக்குநர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை முச்சக்கர வாகனமோட்டிகள் சங்கத்தின் தலைவர் கெலும் ஜயசுந்தர இது தொடர்பாக கூறுகையில், மீpற்றர் டெக்ஸி இயக்குநர்களுக்கு அவர்களின் சேவை முறை காரணமாக பாதிப்பு இல்லை என்றார்.
'இச்சாரதிகள் அனைவரும் பயிற்றுவிக்கப்பட்ட ஒழுக்கமானவர்கள். கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டவை. சாரதிகளை தொடர்புகொள்ளக்கூடியதாக இருப்பதால் பாதுகாப்பு அதிகம். இதனால் மீற்றர் டெக்ஸிகள் பிரபலமாகி வருகின்றன' என்றார். (சண்டே டைம்ஸ்)
ramkumar Sunday, 06 November 2011 07:42 PM
நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் . ஆட்டோ காரர்களின் அட்டகாசம் மிக அதிகம். சரியான சட்டம் நடைமுறை படுத்த வேண்டும். ஆட்டோகாரர் பலர் அதி கூடிய கட்டணம் எடுக்க்கிறார்கள்.
Reply : 0 0
Hot water Sunday, 06 November 2011 08:02 PM
மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வாகனங்களுக்கும் ஏனைய சாதாரண முச்சக்கர வானங்களுக்கும் ஒரே எரிபொருள் செலவுதான், ஆனால் சாதாரண முச்சக்கர வாகனங்களில் மிக அதிகமாக கட்டணம் அறவிடுகிறார்கள்.
Reply : 0 0
avathaani Sunday, 06 November 2011 09:09 PM
புது துடைப்பான் நன்கு கூட்டும் என்பது முதுமொழி, அதேபோன்று இல்லாமல் மீற்றர் முச்சக்கர வண்டியாளர்களும் தொடர்ந்து நல்ல சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.
Reply : 0 0
hodo Tuesday, 08 November 2011 03:43 AM
ஆட்டோக்கரருக்கு இது தேவைதான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
36 minute ago