2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ரபியுல் அவ்வல் கொடியேற்ற நிகழ்வு

Super User   / 2012 ஜனவரி 23 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களின் ஞாபகார்த்தமாக ரபியுல் அவ்வல் கொடியேற்ற நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் 5 மணிக்கு தெவட்டஹக பள்ளிவாசல் என்றழைக்கப்படும் ஷெய்க் உஸ்மான் வாலியுல்லாஹ் மஸ்ஜிதில் நடைபெறவுள்ளதாக பள்ளிசாவலின் நம்பிக்கையாளர் றியாஸ் ஷாலி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அடுத்த 12 நாட்களுக்கு மஃரிப் தொழுகையின் பின்னர் மெலித் ஒதலும் இடம்பெறவுள்ளதுடன் புகழ் பெற்ற உலமாக்கலினால் மார்க்க சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த மெலித் ஒதலின் இறுதி நாளான பெப்ரவரி 4ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் நாட்டு மக்களுக்காகவும் விசேட துஆ பிராத்தனை நடைபெறும் என றியாஸ் ஷாலி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • waaqiff Tuesday, 24 January 2012 01:36 PM

    இது இஸ்லாத்தில் எங்கே,எந்த தூதுவேரால் சொல்லப்பட்டது.???.
    ரசூளிள்ளஹ்வின் சுன்னாஹ்வை குழிதோண்டி புதைத்து விட்டீர்கள்.

    Reply : 0       0

    ibnuaboo Sunday, 29 January 2012 09:39 PM

    முஹம்மத் என்றால் புகழப்பட்டவர் என்று அர்த்தம். ரசூல் ஸல் லல்லாஹு அலைவசல்லாம் அவர்கள் மீது சலவாத் சொன்னால் சொன்னவர்கள் மீது அல்லா சலவாத் சொல்நிறான். இத்தகைய மேன்மையும் உயர்ந்த அந்தஸ்துமுடைய நகலார்மீதுள்ள உகப்பால் அவர்பிறந்த மாதத்தை கண்ணியப்படுத்துவதும் அவர்மீது பிறந்த தினத்தில் மகிழ்ச்சி விழா கொண்டாடுவதும் மிக ஏற்றமான செயலாகும். இது அல்லாஹ் நாடியவர்களுக்கு கிடைக்கும் பாக்கியம். நபிகள் நாயகத்தின் மீது நேசம் இல்லாத பதர்களுக்கு இது உவக்காது. அல்லாஹ்வையும் அவனை நேசித்த நல்லடியார்களையும் நேசிப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .