Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 25 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கொழும்பு மாநகர சபைக்கு ஜனநாயக மக்கள் முன்னணி சார்பாக பிரியாணி குணரத்னவை நியமித்தது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை மாறாக ஜனநாயக மக்கள் முன்னணியின் வீழ்ச்சியையே எடுத்துக்காட்டுகின்றது என பெரியவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமாகிய வேலணை வேணியனுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
எங்கள் அனைவரதும் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவாகிய கட்சியே ஜனநாயக மக்கள் முன்னணி. பல தேர்தல்களில் எமது கட்சியின் வெற்றிக்கு தோழர்கள் முன்னின்று உழைத்ததை யாரும் மறுக்க முடியாது. அதேபோல் அநீதிக்கு எதிரான போராட்டங்களில் அனைவரும் அணிதிரண்டு போரிட்டதையும் தனிநபர் எவரும் உரிமை கோரிடவும் முடியாது. அனைவரும் குழுவாக உழைத்தே கட்சியை வளர்த்தெடுத்தோம்.
இருப்பினும் 2007ஆம் ஆண்டு அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றை தலைவருக்கு அமைத்துக் கொடுப்பதற்காக கட்சிக்குள் நுழைந்த இந்த பெரும்பான்மையின பெண்மணி கட்சியின் வீழ்ச்சிக்கு அன்றுமுதலே காரணமானார். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவரது நடவடிக்கையை பொறுக்கமுடியாது நான் கட்சியிலிருந்து இராஜினாமா செய்ய முடிவெடுத்திருந்தேன். இருப்பினும் பலரது வேண்டுகோளுக்கிணங்க எனது முடிவை மாற்றிக்கொண்டேன்.
கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் மாநாடுகள் நடத்துவதற்கு நானும் எனது அமைப்பாளர்களுமே முன்னின்று செயல்பட்டோம். எவ்வித பொலிஸ் பாதுகாப்புமின்றி மாகாணசபை உறுப்பினராக நின்று இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்தது நானே. மாநாடுகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் கூட்டம் நிறைந்தவுடன் வந்து கலந்து கொண்டது கட்சியின் தலைவரும், பிரியாணி குணரத்னவுமே. இது நான் வளர்த்த கட்சி உறுப்பினர்களுக்கும் சிரேஷ்ட தலைவர்களுக்கும் நன்றாக தெரியும்.
கடந்த மாநகரசபை தேர்தலில் செய்து முடித்த அபிவிருத்திகளை தெரிவித்து வாக்குகளை கோரிய எனது வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. மாறாக தமிழ் தேசியத்தை முன்னிறுத்தியும், தமிழ் உணர்வுகளை வெளிப்படுத்தியும், தனித்துவத்தை நிலைநாட்டுவதன் மூலமாக கொழும்பு மாநகர தமிழர்களின் ஒற்றுமையை சர்வதேசத்திற்கு தெரிவிப்போம் என்றும் வாக்குகளை கோரிய ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், தமிழ் அமைப்புகள் போன்றவை பாரிய ஆதரவை தெரிவித்திருந்தது. மக்களும் தமிழ் உணர்வை முன்னிறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்தனர். முன்னணியின் தலைவருக்கு 28,450 விருப்பு வாக்குகளை வழங்கியிருந்தனர். ஆனால் இன்று இந்த விருப்பு வாக்குகள் ஒரு பெரும்பான்மையின பெண்மணி மாநகர சபைக்கு செல்வதற்கு பயன்பட்டுள்ளது என்பதையும் இந்த பெண்மணியின் ஆக்கிரமிப்பினாலேயே நான் கட்சியிலிருந்து வெளிவருவதற்கு காரணம் என்பதையும் வேலணை வேணியன் புரிந்து கொண்டிருப்பார்.
தலைவரின் விருப்பு வெறுப்புகளுக்கு கட்சியிலுள்ள பிரமுகர்கள் பகடைகாய்களாக பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயமாகும். ஜனநாயக மக்கள் முன்னணியின் எதிர்காலம் சம்பந்தமாக கவலைப்படுவதற்கு இந்த கட்சியை வளர்தெடுத்தவன் என்ற முறையிலே எனக்கு தார்மீக கடமையுள்ளது.
ummpa Thursday, 26 January 2012 02:34 AM
அண்ணாவுக்கு எப்படி இப்படி ஒரு தம்பி !
Reply : 0 0
Nathan Thursday, 26 January 2012 03:42 AM
மகேஸ்வரன் இல்லாத குறையை கொழும்பில் வாழும் தமிழர்கள் உணருகிறார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago