2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மேல் மாகாண ஆளுநராக அலவி மௌலான மூன்றாவது தடவையாக நியமனம்

Super User   / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மூன்றாவது தடவையாகவும் ஆளுநராக பதவியேற்றுள்ளார்.

80 வயதான இவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் வைத்து சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

ஆறாவது மேல் மாகாண ஆளுநரான இவர் 2002ஆம் ஆண்டு முதல் மேல் மாகாண ஆளுநராக அலவி மௌலான செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த தலைவரும் தொழிற் சங்கவாதியுமான அலவி மௌலானா, கொழும்பு மாநகர சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். (படங்கள்:சுதத் சில்வா)


 


  Comments - 0

  • pasha Thursday, 02 February 2012 02:19 PM

    பென்ஷன் வயது என்று ஒன்று இல்லையா?

    Reply : 0       0

    ibnuaboo Friday, 10 February 2012 02:40 PM

    ஜனாதிபதிக்கு விளங்காதது நண்பர் பாஷாவுக்கு விளன்கித்து. பென்சன் வயது முக்கியமில்லை ஆற்றலும் அறிவும் நிர்வாகத்திறனும் தான் முக்கியம . பென்சன் வயதை பார்த்தல் உலகத்திலுள்ள முக்கிய அரசியல்வாதிகள் எல்லாம் வீட்டுக்குத்தான் போகவேண்டும். OLD IS GOLD.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X