2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விவேகானந்த கல்லூரியின் இரத்ததான முகாம்

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் 85ஆவது வருடத்தை முன்னிட்டு பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' என்ற தொனிப்பொருளை கொண்ட இரத்ததான நிகழ்வை கொழும்பு வடக்கு பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேஷநாதன் ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது சேகரிக்கப்பட்ட குருதி மாதிரிகள் அனைத்தும் இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது. பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்டோர் இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .