2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'எரிபொருள் விலையேற்றத்திற்கு நியாயமான தீர்வு பெறும்வரை கடற்றொழிலுக்கு செல்வதில்லை'

Kogilavani   / 2012 பெப்ரவரி 16 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கம் எரிபொருள் விலையேற்றத்திற்கு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வரை கடற்றொழிலுக்கு செல்வதில்லையென நீர்கொழும்பு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

மீன்பிடித் துறை அமைச்சு கனிசமான மானியம் வழங்குவதற்கு தவறிவிட்டதனால்; இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஒரு  தீர்வினை பெற்றுக்கொள்ள எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பது தொடர்பில் நம்பிக்கைக கொண்டுள்ளதாகவும் இத்தீர்மானத்திற்கு சிலாபம் கடற்றொழிலாளர் கூட்டமைப்பு ஆதரவை வழங்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (சுமையா றிஸ்வி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .