2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நீர்கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


'எதிர்க்கட்சியின் எதிர்ப்பு' என்ற தொனிப்பொருளில் நீர்கொழும்பு நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் நீர்கொழும்பு பிரதேச அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளின்  செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வார்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இவ்வார்ப்பாட்டப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயலத் ஜயவர்தன, ரவி கருணாநாயக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது ஐக்கிய தேசியக், கட்சியில் இணைந்துள்ளவருமான அஞ்ஜான் உம்மா, மாகாணசபை உறுப்பினர்களான வேலாயுதம், சாந்தி கோங்காகே, நீர்கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் ஆரம்பமான இவ்வார்ப்பாட்டப் பேரணி நகர மத்தியிலுள்ள பிரதான வீதிகளூடாகச் சென்று வார இறுதிச் சந்தை - பந்துல சந்தை மற்றும் கடைத்தொகுதிகளுக்கு துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .