2025 ஜூன் 23, திங்கட்கிழமை

செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் மைத்துனரின் கொலை தொடர்பில் ஒருவர் கைது

Super User   / 2012 நவம்பர் 04 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சிரினாத் பிரசன்ன ஜயசூரிய, இந்திக ராமனாயக்க)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரின் கொலை தொடர்பிலான சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு, செட்டியார்த் தெருவில் உள்ள நகைக்கடையொன்றில் கணக்காளராக கடமையாற்றி வருகின்ற 60 வயதான சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பவரே கொல்லப்பட்டவராவர். இவர் கொல்லப்பட்ட சமயம் 3.3 மில்லியன் ரூபா பணமும் காணாமல் போயுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநகரும் இதே தொழில் புரிகின்றார். அத்துடன் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

கொல்லப்பட்ட நபரை பிழையா வழி நடத்தி வாகனமொன்றில் இந்த சந்தேகநபர் அழைத்து சென்றுள்ளார். பின்னர் இவர் நானுஓயா, பங்களாவத்தையில் 111ஆம் இலக்க மைல்கல்லுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .