2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நைஜீரியப் பிரஜைகள் இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 27 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

கையடக்கத் தொலைபேசி மூலம் போலியான குறுந்தகவல்களை அனுப்பி ஏமாற்றிவந்ததாகக் கூறப்படும் நைஜீரியப் பிரஜைகள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
அத்துடன், இந்த பண மோசடிக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சிலாபத்தைச் சேர்ந்த இளைஞரை தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் நீதவான் விடுதலை செய்துள்ளார்.

மேற்படி சந்தேக நபர்கள் சிலாபம் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே, சிலாபம் மாவட்ட மேலதிக நீதிபதியும் நீதவானுமாகிய டீ.எம்.ஜே.திஸாநாயக்க மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

சிலாபத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர் ஒருவரின் வங்கிக் கணக்குக்கு குறுகிய காலத்தினுள்; அதிக பணம் வைப்பிலிடப்பட்டமை மற்றும் ஒரு நபருக்கு குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றில் கார் ஒன்று பரிசாகக் கிடைத்துள்ளது என  போலியான தகவல்களை இந்த சந்தேக நபர்கள் தொலைபேசி மூலம் அனுப்பியே ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

குறுந்தகவல்கள் மூலம் ஏமாற்றிய மூவர் கைது



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .