2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நீதிமன்ற சுதந்திரமும் பொருளாதார பிரச்சினையும் தொடர்பான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 28 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நீதிமன்றத்தின் சுதந்திரமும் பொருளாதார பிரச்சினையும் தொடர்பான விசேட கருத்தரங்கு  நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெரான் விக்ரமரத்ன, சட்டத்தரணி சுதர்ஷன பாலகே, சுதந்திர ஊடகவியலாளர் பிரடி கமகே ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வில் நீர்கொழும்பு மாநகரசபையின் பதில் எதிர்க்கட்சித் தலைவர் கெலிசன் ஜயகொடி, சட்டத்தரணி ஸ்ரீலால் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன,
 
'நாட்டில் ஜனநாயகம் பேணப்பட வேண்டும் என்றால்,  நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். நாட்டில் பொதுமக்களின் பணம் பகல் கொள்ளை அடிக்கப்படுகிறது. ஊழல், இலஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களை அடகு வைத்து வெளிநாட்டுக் கடன் பெறப்படுகிறது. இந்தக் கடனை எமது பிள்ளைகளின் பிள்ளைகளும் செலுத்த வேண்டி வரும்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .