2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தனியார் பஸ் பகிஸ்கரிப்பு நிறைவு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 28 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தனியார் பஸ் பணிப் பகிஸ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் குறிப்பாக ஹைலெவல் வீதி உட்பட 50 வழித்தடங்களினூடாக பயணிக்கும் தனியார் பஸ்கள் இன்று பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தன.

அந்தவகையில், அவிசாவலை – கொழும்பு (122), பாதுக்கை – கொழும்பு (125), இங்கிரிய – கொழும்பு (125), மஹரகம – கொழும்பு (138), ஹோமாகம – கொழும்பு (138), கொட்டாவ – கொழும்பு (138), அத்துருகிரிய – கொழும்பு (138), ருக்மல்கம – கொழும்பு (138), மத்தேகொட – கொழும்பு (138), கொட்டாவை – யக்கலுவை (128), கொட்டாவை – கொழும்பு (129) ஆகிய வழித்தட பஸ்களும் இந்த பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டன.

இந்த பஸ் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள்இ பொதுமக்கள் என பலரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .