2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் மூவர் காப்பாற்றப்பட்டனர்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பிலிருந்து 200 கடல் மைலுக்கு அப்பால் படகு கவிழ்ந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மூவரை இலங்கை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் நீர்கொழும்புக்குச் சென்று இம்மீனவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக  தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவர்களுக்கு அவசரகாலச் சான்றிதழ்களை வழங்கவுள்ளதுடன், இவர்கள் சுகமடைந்தவுடன்  இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமெனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .