2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பில் யுவதி கொலை; இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.என்.முனாஷா

நீர்கொழும்பில் யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 வயதான இளைஞர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நீர்கொழும்பில் 17 வயதான யுவதி ஒருவர் வீட்டில் எவரும் இல்லாத வேளையில் நேற்று சனிக்கிழமை காலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிம்புலாபிட்டிய மகாவித்தியாயத்தில் தரம் 11 இல் கல்வி கற்று பரீட்சை பெறுபேற்றை எதிர்பார்த்து காத்திருக்கும்; தினேசிகா மதுரங்கி பெர்னாந்து என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார்.

இந்த இளைஞர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் தொழில் செய்கின்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு வந்த நீர்கொழும்பு பிரதான நீதவான்  ஏ.எம்.என்.பி.அமரசிங்க விசாரணை நடத்தினார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .