2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பில் புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி திறப்பு

Kogilavani   / 2013 ஜூலை 13 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.ஷாஜஹான்      
  

புதிதாக கட்டப்பட்டுள்ள நீர்கொழும்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தார்.

860 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதிய நீதிமன்ற  கட்டிடத் தொகுதியில் இரண்டு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்கள்,  மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம், சிறுவர் நீதிமன்றம், இரட்சண்ய சேனை காரியாலயம் ஆகியன இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தபால் நிலையம் மற்றும் வங்கியொன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .