2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பாதுகாப்பு ஊழியர்கள் நியமிப்பு

Kogilavani   / 2013 ஜூலை 14 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.ஷாஜஹான்        


நீர்கொழும்பில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பாதுகாப்பு பணியினை மேற்கொள்வதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஒரு ரயில் கடவையில் மூன்று பேர் வீதம் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் மேற்பார்வையுடன் இவர்களது பணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இவர்களுக்கு மாதாந்த சம்பளமாக ரூபாய் 7,500 வழங்கப்படவுள்ளது. இதேவேளை, இவர்கள் தினமும் 8 மணித்தியாலம் வேலை செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு நிக்கலஸ் மார்க்கஸ் மாவத்தையில் கீள்ஸ் சுப்பர் மார்க்கட் முன்பாக தலாதூவ பிரதேசத்திற்கு செல்லும் பாதுகாப்பற்ற ரயில் குறுக்குப் பாதையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதை காணலாம்.

இந்த ரயில் கடவையில் இடம்பெற்ற  விபத்துக்களில் இதுவரை 25 பேர் மரணமாகியுள்ளமையும் பலர் படுகாயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .