2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மீள் நல்லிணக்கத்தில் மதங்களின் பாத்திரம் தொடர்பான தேசிய மாநாடு

Super User   / 2013 ஜூலை 16 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீள் நல்லிணக்கத்தில் மதங்களின் பாத்திரம் தொடர்பான தேசிய மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சர்வதேச உறவுகள் மற்றும் உபாயக் கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்ன பிரதான உரையை ஆற்றவுள்ளார்.  இதற்கு மேலதிகமாக பேராசிரியர் ரொஹான் குணரத்ன, வண. பேராசிரியர். பெல்லன்வில விமலரத்ன, வண. அருட் சகோதரர் பெனடிக்ட் ஜோசப்,
வண. ராமச்சந்திர குருக்கள் பாபு ஷர்மா, என்.எம்.அமீன்,வண. கல்கந்த, தம்மானந்த, கலாநிதி. பிரதீப் ஜெகநாதன் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

பல்வேறு தலைப்புகளில் மீள் நல்லிணக்கம் சம்பந்தமான தொடரான தேசிய மாநாடுகளை லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகம் ஒழுங்குசெய்துள்ளது. இதன் எட்டாவது மாநாடே மீள் நல்லிணக்கத்தில் மதத்தின் பாத்திரம் எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .