2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி சிகிச்சை பலனின்றி மரணம்

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்       

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு, பெரியமுல்லை, லாஜரஸ் வீதியை சேர்ந்த 17 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டு சமையலறையில் வைத்து தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரியவருகின்றது.

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சi பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .