2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

திறந்த பல்கலையின் பாதுகாப்பு பலப்படுத்தல்

Super User   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

விரிவுரையாளரொருவர் தாக்கப்பட்டதை அடுத்து நாவலையிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட பீட விரிவுரையாளரான யசோதர கதிர்காமத்தம்பி கடந்த ஜுன் மாதம் மாணவனொருவனால் பல்கலைகழகத்தில் வைத்து தாக்கப்பட்டார். இதனையடுத்தே பல்கலைகழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பல்கலைகழகக்கழகத்தில் கடமையாற்றுபவர்கள் தவிர்ந்த எவரும் வாகனத்தில் உள் நுழைய முடியாது. அத்துடன் மாணவர்கள் தமது பல்கலைக்கழக அடையாள அட்டையினை காண்பித்து வரவுப் புத்தகத்தில் கையொப்பமிட்ட பின்னரே பல்கலைக்கழத்திற்குள் நுழைய முடியும்.

தாக்குதலுக்குள்ளான சட்ட பீட விரிவுரையாளர் திறந்த பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்திலேயே கடமையாற்றுக்கின்றார். இந்த பீடத்தின் ஒப்படை சமர்ப்பிக்கும் பிரிவும் தற்போது இடமாற்றப்பட்டுள்ளது.

முன்னர் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீட கட்டித்தில் காணப்பட்ட ஒப்படை சமர்ப்பிக்கும் அறை, விரிவுரையாளர் தாக்குதலின் பின்னர் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலிலுள்ள பிராந்திய கற்கை நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .