2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அசிட் வீசி நகை கடையில் கொள்ளை: ஊழியருக்கும் பாதிப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்       

நீர்கொழும்பு பிரதான விதியில் அமைந்துள்ள நகை கடையொன்றில் அசிட் வீசி தாக்குதல் நடத்திய நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பத்தரை பவுண்  கொண்ட  நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அசிட் வீச்சுக்கு இழக்கான குறித்த நகை கடையின் ஊழியர் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ரவிநாத் என்ற 20 வயதுடைய நகை கடை ஊழியரே அசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கொள்ளை சம்பவம் இடம் பெற்ற நகை கடை நீர்கொழும்பு பிரதான வீதியில் மெக்சி சுப்பர் மார்க்கட்டில் அமைந்துள்ளது. கடையின் மேல் மாடியில் அமைந்துள்ள அறையொன்றிலேயே  ஊழியர் தங்கியுள்ளார்.

நேற்று அதிகாலை  2.20 மணியளவில் தனது அறை கதவு தட்டப்பட்டுள்ளதை அடுத்து குறித்த இளைஞர் கதவை திறந்த போது சந்தேக நபர் அசிட் வீசியதுடன்  இளைஞர் மீது தடியொன்றினால் தலையில் தாக்கி நகை கடை சாவியினை கேட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் தப்பியோடி  தனது அறையின் அருகிலிருந்த மலசல கூடத்திற்குள் நுழைந்து தண்ணீரினால் தனது உடம்பை நனைத்த பின் அறையின் பின்பக்கமாகவுள்ள குழாயை பிடித்து கீழிறங்கி தப்பியோடியுள்ளார்.

இவரது உடம்பின் நெஞ்சு பகுதி மார்பகம் மற்றும் முகம்  ஆகியவை அசிட்ட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தலையில் தடியினால் தாக்கப்பட்ட காயம் ஏற்பட்டுள்ளது.

சுhவியை கண்டெடுத்த சந்தேகநபர் கடையை திறந்து நகையை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .