2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பேரினவாதிகளுக்கு துணைபோவது பின்னடைவுக்கே வழிசமைக்கும்; ராம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 10 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகளை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு எமது நாட்டின் கடந்தகால அரசியல் அனுபவங்களை புறந்தள்ளி புதைத்துவிட நினைக்கும் கடும்போக்கு பேரினவாத சக்திகளின் கரங்களைப்பலப்படுத்துவதற்கு முயற்சிப்பது எமது பின்னடைவுக்கே வழிசமைக்கும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி. ராம் தெரிவித்துள்ளார்.

இன்றை ஆட்சிக்கு துணைபோகாது எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும். அதன் ஊடாக தமது வெற்றியை நிர்ணயித்து பேரினவாதிகளுக்கு பாடம் புகட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளின் கருத்துகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காது எமது நாட்டின் பிரச்சினையை தீர்க்கக்கூடிய வகையில் தூரநோக்குடன் அணுகவேண்டும்.

அதனைவிட்டு விட்டு அரசாங்கத்திற்குள் இருக்கும் கடும்போக்காளர்கள் சர்வதேச சமூகத்தை வெறுக்கும் நோக்குடன் கடுமையான விமர்சனங்ளை முன்வைப்பதையோ, குற்றஞ்சுமத்துவதையோ தவிர்க்கவேண்டும். இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் தெளிவான நோக்குடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையின கடும்போக்கு அமைப்புகளும் அரசாங்கத்தில் இருக்கின்ற கடும்போக்காளர்களும் இனவாத கருத்துக்களை கூறிவருவது சமாதானத்தை விரும்புகின்ற அனைவர்களிடத்திலும் ஒருவகையான வெறுப்புணர்வையே ஊட்டிவருகின்றது. இது கவலையளிப்பதாகவே அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் எதிர்ப்புகளையும் மீறி தேர்தலில் வடமாகாண மக்கள் தமது ஒற்றுமையை வெளிக்காட்டுவார்கள் என்பது உறுதியாகும்.

அதேபோல மத்திய மற்றும் வடமேல் மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய மக்கள் பிரதிநித்துவத்தை பாதுகாத்து எமது எதிர்கால இலக்கை எட்டுவதற்கான அரசியல் குறிகோள் பற்றி தெளிவாக சிந்திக்கவேண்டும். அதுவே இன்றை அரசியல் தேவையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .