2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் இல்லத்திலிருந்து எழுவர் தப்பியோட்டம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, பயாகல பம்பே சிறுவர் இல்லத்திலிருந்து ஏழுபேர் இன்று வெள்ளிக்கிழமை தப்பியோடியுள்ளதையடுத்து அந்த சிறுவர் இல்லத்திலிருக்கும் சகல சிறுவர்களையும் ஏனைய ஐந்து சிறுவர் இல்லங்களுக்கு மாற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏழு சிறுவர்கள் தப்பியோடியுள்ளதாக  பொலிஸார் களுத்துறை மேலதிக நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தததையடுத்தே மேலதிக நீதவான் அயேஷா ஆபிதீன் மேற்கண்டவாறு பணித்தார்.

இந்த சிறுவர் இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பியோடுதல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுதல் உள்ளிட்ட சம்பவங்களை தான் கவனத்தில் கொண்டதாகவும் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள சிறுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாகவும் மேலதிக நீதவான் சுட்டிக்காட்டினார்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள சகல சிறுவர் இல்லங்களையும் சோதனைக்கு உட்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, சிறுவர் இல்லங்களுக்கு புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகம்  சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி மேலதிக நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் இந்த செய்திகள் ஊடகங்களில் வெளிவராதவகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிநின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .