2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலைக்குள் வைத்து சிற்றூழியரை தீண்டிய பாம்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் 7 ஆவது மாடியில் வைத்து விஷப்பாம்பு தீண்டியதால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலையின் சுத்திகரிப்பு ஊழியர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சான் என்றழைக்கப்படும் 20 வயதான ஊழியரே பாம்புகடிக்கு உள்ளானவராவர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரி;ய வருவதாவது,

 குறித்த ஊளியர் வெள்ளிக்கிழமை அதிகாலை கடமையில் ஈடுபட்டிருந்தபோது 7 ஆவது மாடியின் ஜன்னலோரமாக நின்றபடி வெளியில் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

இதன் போது திடீரென்று ஜன்னலோரமாக இருந்த பாம்பு ஊழியரை தீண்டியுள்ளது ஏதோவொரு விஷ ஜந்து தீண்டியதாக அவர் உணர்ந்து கொண்டுள்ளார் சிறிது நேரத்தில் இந்த ஊழியர் இரத்த வாந்தி எடுத்துள்ளதுடன் துடிதுடித்தபடி இருந்துள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது புடையன் பாம்பே அவரை கடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள ஊழியர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .