2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் சேவை ஆரம்பம்

Super User   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தீபா அதிகாரி, எம்.இஸட்.ஷாஜஹான்  


கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் சேவை இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகவேக நெடுஞ்சாலையில் சுமார் 20 சொகுசு பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையூடாக நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கான விசேட சொகுசு பஸ் சேவையும் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்திலிருந்து இந்த சொகுசு பஸ் சேவையை பிரதி அமைசசர் சரத் குமார குணரட்ன் ஆரம்பித்து வைத்தார். அதிவேக நெடுஞ்சாலையூடாக நீர்கொழும்பிலிருந்து கொழும்பிற்கு ஏழு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .