2025 ஜூன் 21, சனிக்கிழமை

தேசிய தமிழ் பாடசாலைகள் இரண்டை உருவாக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கல்வி மற்றும் பௌதீகவளம் வளர்ச்சி அடைந்துள்ளதாக கருதப்படும் தேசிய பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சேர்ப்பதற்காக தமிழ் பெற்றோர்கள் கொழும்பில் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்கும் முகமாக, மேலதிகமாக தேசிய தமிழ் பாடாசாலைகள் இரண்டை கொழும்பு மாநகரில் உருவாக்கி தரும்படி, கல்வி அமைச்சர் பந்துல்ல குணவர்த்தனவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

சர்வதேச ஆசிரியர் தினமான திங்கட்கிழமை(6) காலை, கல்வி அமைச்சர் பந்துல்ல குணவர்தனைவை தொடர்புகொண்ட மனோ கணேசன் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனநாய மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'வளர்ச்சியடையக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், இன்னமும் முறையாக வளர்ச்சியடையாத மாகாணசபை பாடசாலைகளை, தேசிய கல்லூரிகளாக சீரமைக்கும் திட்டத்தின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் சில மாகாணசபை பாடசாலைகள், மத்திய அரசினால்  சுவீகரிக்கப்படுகின்றன. இவற்றில் தற்போது சிங்கள பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொழும்பின் தமிழ் பாடசாலைகளான, கணபதி இந்து மகளிர் வித்தியாலயத்தையும் வடகொழும்பு இந்து கல்லூரியையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஜமமு தலைவர்  மனோ கணேசனின் கல்வி அமைச்சர் பந்துல்ல குணவர்தனவிடம் கோரியுள்ளார்.
இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்த, அமைச்சர் இது தொடர்பில் எழுத்து மூல விபரங்களை உடன் அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேற்படி கோரிக்கையையடுத்து, அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எழுத்து மூலமான ஆவணத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனத்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் வாழும்  258,655 தமிழர்களில் சுமார்  70 விகிதமானோர் கொழும்பு மாநகரில் வாழ்கின்றார்கள். கொழும்பு மாநகரில் வாழும் தமிழர்களில் 60 விகிதமானோர், அதாவது 106,325 பேர் வட கொழும்பு, மத்திய கொழும்பு ஆகிய இரண்டு தொகுதிகளில்; வாழ்கிறார்கள்.

எனவே தமிழர்கள் கொழும்பில் அதிகம் வாழும் வடக்கு, மத்திய கொழும்பு வலயத்தில் இன்னமும் இரண்டு தேசிய தமிழ் பாடசாலைகளை உருவாக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்களது வேண்டுகோளின்படி மத்திய கொழும்பின் கணபதி இந்து மகளிர் வித்தியாலயம், வடகொழும்பு இந்து வித்தியாலயம் ஆகிய மாகாணசபை பாடசாலைகளை, தேசிய கல்லூரிகளாக தரமுயர்த்தி அபிவிருத்தி செய்யும்படி சிபார்சு செய்கின்றேன்' என குறிப்பிட்டுள்ளார்.    

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .