2025 ஜூன் 21, சனிக்கிழமை

விபுலானந்தாவின் சேவை தமிழ் கல்வி சமூகத்துக்கு தேவை: பிரபா

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 10 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வசதிமிக்க பகுதிகளில் உள்ள பாடசாலைகளைப் பற்றி நான் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. மாறாக தெமட்டகொடை போன்ற வருமானம் குறைந்த ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் அபிவிருத்தியில் தான் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இங்கே புதிதாக எழுந்து நிற்கும் இந்த கட்டடத்தைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது காலகட்டத்தில் இப்படியான ஒரு கட்டடத்தை இந்த வித்தியாலய வளாகத்திற்குள் கட்ட முடிந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். விபுலானந்தா பாடசாலையின் சேவை தமிழ் கல்வி சமூகத்திற்கு அவசியம் தேவை என தெமட்டகொடை விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத் தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபாகணேசன் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் தெரிவித்ததாவது,
 
அதிபர் பேசும் போது கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது எனது கட்சி வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறினார். அது உண்மை தான். ஆனாலும் இன்று உங்களுக்காக நான் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் வாக்களித்தவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் எங்கே என்று பலரும் இன்று என்னிடமே கேட்கிறார்கள். அவர்கள் உங்கள் நலனில் அக்கறை இல்லாமல் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. இந்தக் கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தது நான் தான் என்று அதிபர் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆயிரம் பாடசாலை அபிவிருத்தியில் மேல்மாகாணத்தில் எந்தவொரு தமிழ் பாடசாலையும் உள்வாங்கப்படவில்லை என்பதை இப்பாடசாலையின் அதிபர் சண்முகநாதன் தான் எனது கவனத்திற்கு முதன் முதலாக கொண்டு வந்தார்.
 
இதனடிப்படையில் நான் முதலமைச்சரிடம் பேசிய போது, இது சம்பந்தமாக எந்தவொரு மாகாணசபை உறுப்பினர்களும் என்னிடம் சொல்லவில்லை. நீங்கள் தான் இப்போது சொல்கிறீர்கள் என்று கூறியதுடன் மேல்மாகாணத்திலுள்ள மூன்று தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்தியை 1,000 பாடசாலையின் அபிவிருத்தியின் கீழ் ஒதுக்கிக் கொடுத்தார். அந்த மூன்று பாடசாலைகளில் இந்த பாடசாலையும் ஒன்று. 
 
எனவே இந்தகட்டடம் கட்டப்படுவதற்கான பெருமை எனக்கல்ல இந்தப் பாடசாலையின் அதிபருக்கே செல்ல வேண்டும். இந்தப் பாடசாலையின் அபிவிருத்திக்காக இந்த வருடமும் எனது நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கியுள்ளேன் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .