2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஐக்கிய மலே தேசிய முன்னணியின் சர்வதேச மாநாடு

Kogilavani   / 2014 நவம்பர் 26 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா
 
மலேசியாவின் ஆளும் கட்சியான ஐக்கிய மலே தேசிய முன்னணியின் (ருஆNழு) சர்வதேச மாநாடு திங்கள் மற்றும் செவ்வாயக்கிழமைகளில் அந்நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இடம்பெற்றது.
 
மலேசியப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற இம்மாநட்டின்; முதல் நாள் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றார்.
 
இரண்டாம் நாள் நிகழ்வில் இவருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி, அமைச்சர் ஹக்கீமின்;இணைப்புச் செயலாளர் எம்.எச்.எம்.சல்மான் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.
 
இம்மாநாட்டின் இறுதி அமர்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிறப்புரையாற்றினார்.

இந்த சர்வதேச மாநாட்டில் எழுபதுக்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
 
அதேவேளை மேற்படி ஐக்கிய மலே தேசிய முன்னணி மற்றும்    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றுக்கு இடையிலான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .