2025 ஜூன் 21, சனிக்கிழமை

சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 10 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சமூக ஆர்வலர்களுக்கு, சமூக ஒருமைப்பாடும் சகவாழ்வு எண்ணக்கருவும் எனும் தொனிப்பொருளிலான மூன்று  நாள் பயிற்சிநெறி கொழும்பு  இலங்கை மன்றக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (09)  ஆரம்பமானது.

நாடாளாவிய ரீதியில் பல்வேறு சமூக அமைப்புக்களில் பணியாற்றும் சுமார் 30 சமூக ஆர்வலர்கள் எழுத்தாளர்கள், சமாதான சகவாழ்வுச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இந்தப் பயிற்சிநெறியில் பங்குபற்றுகின்றனர்.

ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின்   வளவாளரும் சுதந்திர ஊடகவியலாளருமான கலாநிதி விஜேசிறிவர்தன, பிலிக்ட் திட்டத்தின் இணைப்பாளர் விஜிதா ரெங்கநாதன், பிலிக்ட் வளவாளர் லக்ஷன பெரேரா, இலங்கை மன்றக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி விஜேரத்தின, முகாமைத்துவ வளவாளர் பானு பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்குகின்றனர்.

இந்தப் பயிற்சிநெறி நாளை வியாழக்கிழமைவரை நடத்தப்படவிருப்பதாக பிலிக்ட் திட்டத்தின் இணைப்பாளர் விஜிதா ரெங்கநாதன் தெரிவித்தார்.
பயிற்சிநெறியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிலிக்ட் திட்டத்தின் இணைப்பாளர் விஜிதா ரெங்கநாதன், 'பண்பாடு பற்றிய எமது சிந்தனையில் மாற்றம் வேண்டும். இச்சிந்தனை மாற்றம் இன்று அவசியமானது. பிளவுகளோடும்  மோதல்களோடும் பண்பாடு கொண்டுள்ள உள்ளார்ந்த தொடர்புகளையும் பிரச்சினைகளின் தீர்வுக்கு பண்பாடு வழங்கக்கூடிய ஆக்கபூர்வமான பங்கையும் ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனமும் பிலிக்ட் அமைப்பும் நன்குணர்ந்துள்ளதால் இலங்கையில் வாழும் பல்லின கலாசார பண்பாடுகள் நிறைந்த மக்களிடையே சமூக ஒருமைப்பாட்டையும் சகவாழ்வையும் ஏற்படுத்த விரும்புகின்றது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .