2025 ஜூன் 21, சனிக்கிழமை

மேல் மகாணசபை அமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பேரணி

Gavitha   / 2014 டிசெம்பர் 15 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்துள்ள மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து, நீர்கொழும்பு பிரதேச வாசிகள் இன்று திங்கட்கிழமை (15) நீர்கொழும்பு நீதிமன்றம் வரை பேரணியாக சென்றனர்.

தன்னை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்தாக குற்றஞ்சாட்டி பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக மேல் மாகாண சபை அமைச்சர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் நீர்கொழும்பு, லெய்டன் விளையாட்டரங்கில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில்,  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காக்க உரையாற்றும் போது,  தனக்கு எதிராக போதைப் பொருள் விற்பனை அவதூறு கூறியிருந்ததாக முறைப்பாட்டாளரான மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா இந்த வழக்கின் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த  வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே நீர்கொழும்பு சாந்த ஜோசப் வீதியிலிருந்து புறப்பட்ட பல ஆயிரக்கணக்கான பிரதேச வாசிகள் நீர்கொழும்பு நீதிமன்றம் முன்பாக பேரணியாக வந்து, மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

இவ்வழக்கு விசாரணைக்கு ரஞ்சன் ராமநாயக்க வரவில்லையாயினும் தான் வராதது தொடர்பில் நீதிமன்றுக்கு தமது சட்டத்தரணி மூலம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த நீர்கொழும்பு பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .