2025 ஜூன் 21, சனிக்கிழமை

முத்துஹெட்டிகமவுக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

Thipaan   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 26ஆம் திகதி நாட்டிலிருந்து தப்பியோடிய சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் கைது செய்யப்பட்டார்.

வதுரம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் பிரசாரக் கூட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முத்துஹெட்டிகமவின் ஆதரவாளர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களை கடத்திச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் பத்தேக நீதிமன்றத்தினால் முத்துஹெட்டிகமவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடந்த 26ஆம் திகதி விசேட விருந்தினர்கள் பயணிக்கும் வாயிலின் ஊடாக சிங்கபூருக்கு பயணமாகியிருந்தார்.

இந்நிலையில் பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம, நேற்று நாடு திரும்பிய போது, விமான நிலையத்தில் காத்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் அடங்களாக 25 பேர் கொண்ட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் பூர்ணிமா பரணகமவின் வாசஸ்தலத்தில் அவர் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே அவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அவரை இன்று திங்கட்கிழமை பத்தேகம நீதவான் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்துமாறு பணித்தார். பிரதியமைச்சர் முத்துஹெட்டிகமவுக்கு எதிரான வழக்கு, பத்தேகம நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவையினூடாக நேற்று முற்பகல் 11.15க்கு இலங்கை வந்தடைந்தடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .