2025 ஜூன் 21, சனிக்கிழமை

இம்முறையும் ஜனாதிபதி மஹிந்தவே வெல்வார்

Kogilavani   / 2015 ஜனவரி 01 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இசெட்.ஷாஜஹான்

'மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று  வீதிகள் தோறும் சந்திகள் தோறும் பேசப்படுகிறது. சில ஊடகங்களும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் செய்திகளை வெளியிடுகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பொன்சேகா வெற்றி பெறுவார் என்றே பேசப்பட்டது, ஆனால் நடந்தது என்ன? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே வெற்றி பெற்றார்' என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்கஷவுக்கு ஆதரவாக பிரசாரக் கூட்டம் நீர்கொழும்பில வியாழக்கிழமை(1) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  சரத்பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.  இது சர்வதேசத்தின் சதி என்று அப்போது  நாங்கள் குறிப்பிட்டோம். அதேபோன்று பல கோடி ரூபா வெளிநாட்டுப் பணம் வெளிநாடுகளில் இருந்து அவருக்கு அனுப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது. அன்று நடைபெற்ற தேர்தலில் பொன்சேகா வெற்றி பெறுவார் என்றே பேசப்பட்டது, ஊடகங்களும் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் செய்திகளை வெளியிட்டன. இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார். இந்த தடைவையும் அவரே வெற்றிபெறுவார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திதரிகா அம்மையாரின் முகத்தை தொலைக்காட்சியில் அடிக்கடி காண்பிக்குமாறு நான் கேட்கிறேன். அப்போதுதான்  ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்' என்றார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .