2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஐ.நா. பிரதிநிதியுடன் ஹக்கீம் சந்திப்பு

A.P.Mathan   / 2015 ஜனவரி 20 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் ஆசிய, பசுபிக் பிராந்திய அரசியல் விவகார பணிப்பாளர் மரி யமஷிதா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். 

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி சிபினாய் நண்டி மற்றும் ஆலோகர் கிடா ஷபர்வால் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்குபற்றினர். சென்ற ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் மரி யமஷிதா அவர்களும் குழுவினரும் அமைச்சர் ஹக்கீமை சந்தித்து உரையாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .