2025 ஜூன் 21, சனிக்கிழமை

இந்து நாகரிகம் மற்றும் இந்திய அறிவு அமையம்: தொடர் விரிவுரைகள்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ப.பிறின்சியா டிக்சி

சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம், மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் அஷ்ட்டாங்க யோக மந்திர் ஆகியன இணைந்து வழங்கும் சமயம் சார் தொடர் விரிவுரைகள், எதிர்வரும் சனிக்கிழமை (07) முதல் புதன்கிழமை வரை (11) நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

'இந்து நாகரிகம் மற்றும் இந்திய அறிவு அமையம்' எனும் தலைப்பில் நடைபெறவுள்ள இந்த விரிவுரைகளை கலை, விஞ்ஞானம் உட்பட பல்வேறு துறைகளில் பி.எச்.டி, எம்.எஸ்.சி, எம்.ஏ, எம்.பீ.ஏ ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இந்திய விஞ்ஞான பாரம்பரிய நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி என்.கோபாலகிருஷ்ணன் நிகழ்த்துவார்.

தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விரிவுரைகள் அனைத்தும் ஆங்கில மொழியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் நாள்

முதலாம் நாள் விரிவுரை இராமகிருஷ்ண மிஷன், கருத்தரங்கு மண்டபத்தில் சனிக்கிழமை (07) மாலை 5.30 மணி தொடக்கம் 7 மணி வரை நடைபெறும்.

புராதன இந்து சமய கிரியைகள் மற்றும் சம்பிராதாயங்களை 21ஆம் நூற்றாண்டிலும் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் எனும் தலைப்பில் முதல் நாள் விரிவுரை இடம்பெறும்.  

இந்நிகழ்வில், மீள்குடியேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சரும் சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகத்தின் தலைவருமான டீ.எம்.சுவாமிநாதன் வரவேற்புரையினை நிகழ்த்துவார்.

சிறப்பு அதிதியாக யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் கலந்துகொள்வார்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் விரிவுரை, மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை 6.30 மணி தொடக்கம் 8.30 மணி வரை நடைபெறும். இந்தியாவின் கலாசார பாரம்பரியம் எனும் தலைப்பில் இரண்டாம் நாள் விரிவுரை இடம்பெறும்.   

மூன்றாம் நாள்

மூன்றாம் நாள் விரிவுரைகள், மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் திங்கட்கிழமை (09) மாலை 07 மணி தொடக்கம் 8.30 மணி வரை நடைபெறும். ஜாதகம், சோதிடம், காண்டம் மற்றும் பரிகாரம் எனும் தலைப்பில் இவ்விரிவுரை இடம்பெறும்.

நான்காம் நாள்

நான்காம் நாள் விரிவுரை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (10) மாலை 07 மணி தொடக்கம் 8.30 மணி வரை நடைபெறும்.

விமானம், உலோகம், சோதிடம், வானியல் இரசாயனம் மற்றும் கணிதம் போன்ற விடயங்களில் இந்துக்களின் புராதன விஞ்ஞான கண்டுபிடிப்புக்களும் அறிவும் எனும் தலைப்பில் இவ்விரிவுரை இடம்பெறும்.

ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாள் விரிவுரை இந்திய கலாசார நிலையத்தில் புதன்கிழமை (11) மாலை 6.30 மணி தொடக்கம் 08 மணி வரை நடைபெறும். அன்றாட வாழ்வில் சோதிடம் மற்றும் வானியலின் செல்வாக்கு எனும் தலைப்பில் இவ்விரிவுரை இடம்பெறும்.

இந்நிகழ்வுகளுக்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சகிதம் கலந்துகொள்ளும்படி இந்து சமய ஆர்வலர்களிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் இதனோடு இணைந்து விசேட யோகா வகுப்புகளும் இலக்கம். 03, றிட்ஸ்வே பிளேஸ், கொழும்பு – 04இல் இடம்பெறவுள்ளன. இவை, ஞாயிற்றுக்கிழமை (08) தொடக்கம் புதன்கிழமை (11) வரை காலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.  மேலதிக தகவல்களுக்கு 0777274859 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .