2025 ஜூன் 21, சனிக்கிழமை

ரூ.5 இலட்சம் பெறுமதியான நகைகள், மடிக் கணினிகள் திருட்டு

Thipaan   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-எம்.இஸட். ஷாஜஹான்


நீர்கொழும்பு நகரின் வர்த்கப் பிரதேசத்தில் அமைந்துள்ள நகை கடையொன்றில் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் மடிக் கணினி என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு இன்று (04)செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம்,  இன்று அதிகாலை வேளை இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிய வருகிறது.

நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள இந்தக் கடையில் நகைகள் மற்றும் கைக் கடிகாரங்கள் என்பன  விற்பனை செய்யப்படுகின்றன. கடையின் உரிமையாளர் நீர்கொழும்பைச் சேர்ந்த எஸ்எச்.எம். நசூர்தீன் என்பவராவார்.

சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளரின் மைத்துனர் தெரிவிக்கையில்,

நேற்று வெள்ளிக்கிழமை (03) இரவு 7.30 மணியளவில் கடை மூடப்பட்டது.  நள்ளிரவு வேளையில் திருட்டு இடம்பெற்றிருக்கலாம் என நினைக்கிறோம். கடையின் மேல் மாடி வழியாக நுழைந்து,  அல்லது மேல் மாடியில் உள்ள யன்னலை திறந்து உள்ளே நுழைந்தே திருட்டு இடம்பெற்றிருக்கலாம் என கருதுகிறோம்.

தங்கம் மூன்று அல்லது நான்கு பவுண், வெள்ளி 500 கிராம், இரண்டு மடிக் கணினிகள் உட்பட ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவு போயுள்ளன.

கடையில் இருந்த பாதுகாப்புப் பெட்டகத்தை திருடர்களால்  திறக்க முடியாமல் போனதன் காரணமாக பெரும் எண்ணிக்கையான நகைகள் களவாடப்படவில்லை.

கடையில் இருந்த இலாட்சிகள் நான்கை உடைத்தே திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்.

இதேவேளை, இன்று முற்பகல் நீர்கொழும்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதுடன் சம்பவ இடத்தையும் ஆராய்ந்தனர்.
 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .