Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை
Editorial / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலங்கம பிரதேசத்தில் மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டுக்குள் வைத்து கோடீஸ்வர வர்த்தகரை படுகொலைச் செய்து, நீச்சல் தடாகத்தில் தள்ளிவிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கணவன், மனைவியான இவ்விருவரும், கடுவலை நீதவான் ஷாமீர் விஜேபண்டார முன்னிலையில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்டனர். அவ்விருவரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணிடம், மனித படுகொலை தொடர்பிலான தகவல்களை மறைத்து, சாட்சிகளை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் இன்னும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், சந்தேநபரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
முதலாவது சந்தேநபரின் சாட்சியின் பிரகாரம், கோடீஸ்வர வர்த்தகரை படுகொலைச் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட உருளை கம்பை, பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago