Princiya Dixci / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்மலானை பகுதியில் சட்டவிரோத 100 மதுபான போத்தல்களை வைத்திருந்தவரை, நேற்று புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரத்மலானை புகையிரத நிலையத்துக்கு அருகாமையிலுள்ள சந்தைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர், இரத்மலான பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவரை இன்று வியாழக்கிழமை (17) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .