வீடொன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் இரண்டு மகன்மார்களும் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் மினுவங்கொட கமகெதர பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. 51 வயதான தந்தையும் 24 மற்றும் 23 வயதுகளான மகன்மார் இருவரும் மரணித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் காரொன்றில் வந்தவர்களே இவ்வாறு துப்பாக்கிப் பிர​யோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனார்.

இன்றைக்கும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த பட்டம் தொடர்பில் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.