2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி நபர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை (23) இரவு ரயிலில் மோதி உயிரிழந்துள்ள நபர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

உயிரிழந்த நபர், கொழும்பு - 05 ஐ வசிப்பிடமாகக் கொண்டிருந்த 51 வயதுடையவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X