2025 ஜூன் 28, சனிக்கிழமை

நெடுந்தீவில் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டம் 3 மாதகாலத்தில் சாத்தியமாகும்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சொர்ணகுமார் சொரூபன்
 
நெடுந்தீவில் கடல் நீரினை நன்னீராக மாற்றி குடிநீராக  பயன்படுத்தப்படவுள்ளதாகவும், இது 3 மாதகாலப்பகுதியில் சாத்தியமாகும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சமூகவியளாலர் திருமதி பாலகுமாரி ஐங்கரன் வெள்ளிக்கிழமை (11) தெரிவித்;தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூகமயப்படுத்தப்பட்ட கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திட்டத்தின் கீழ் இந்த நன்னீர் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நெடுந்தீவில் தலா 50 மீற்றர் கியூப் நீரினை உற்பத்தி செய்யக்கூடிய 2 இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. 

ஒரு மீற்றர் கியூப் நீரினை நன்னீராக்குவதற்கு 160 ரூபாய் செலவாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்கு குடிநீர் கொண்டு செல்லும் செலவினை பார்க்கிலும் கடல் நீரினை நன்னீராக மாற்றும் செலவு குறைவு. ஆனால் இத்திட்டத்தினை யாழ். மாவட்டம் முழுவதும் செயற்படுத்த முடியாது ஏனெனில் இதன் செலவு அதிகமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .