2025 ஜூன் 18, புதன்கிழமை

பாட்டுக் கச்சேரியில் கோஷ்டி மோதல்; ஐவர் காயம்; 6 பேர் கைது

Menaka Mookandi   / 2013 மே 11 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மானிப்பாய் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவமொன்றில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன், மேற்படி மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள கோவிலில் பாட்டுக் கச்சேரியொன்று நடைபெற்றுள்ளது. இதன் போது கச்சேரிக்கு மதுபோதையில் சென்ற இளைஞர்கள் சிலரே மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இத்தகராற்றின் போது, படுகாயம் அடைந்த 5 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .