2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். மருத்துவ சங்கத்தின் வருடாந்த மாநாடு 2012

A.P.Mathan   / 2012 நவம்பர் 30 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். மருத்துவ சங்கத்தின் வருடாந்த மாநாடு, யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில், புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமாரன் தலைமையில் ஆரம்பமாகியது.

இந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட சத்திர சிகிச்சை நிபுணர் எம்.கணேசரட்ணம் மற்றும் சிரேஷ்ட புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜயந்த பாலவட்ணவும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, “நோய் வருமுன் காப்பது” எனும் தொனிப்பொருளிலான கருத்துரையினை சிரேஷ்ட சத்திர சிகிச்சை நிபுணர் எம்.கணேசரட்ணம் வழங்கினார்.

இம்மாநாட்டில், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஸ்ரீபவனாந்தராஜா மற்றும் வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .