2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பனை உற்பத்தியால் வட, கிழக்கில் ரூ. 39 மில்லியன் வருமானம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வட, கிழக்கில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பனைசார் உற்பத்தி பொருட்கள் விற்பனையின் மூலம் இவ்வருடம் 39 மில்லியன் ரூபா வருமானத்தினைப் பெற்றுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி ஜீவரத்தினம் இன்று புதன்கிழமை (13) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பனை அபிவிருத்தி சபையினால் பனைசார் உற்பத்தி கைவினைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்தப் பயிற்சி மூலம் பனைசார் உற்பத்தி கைவினை பயிற்சியினை நிறைவு செய்த பெண் தலைமைத்துவ குடும்ப பெண்கள் தமது குடும்ப சுமையினை போக்கும் முகமாக தங்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்கள் இவ்வருடம் தாம் உற்பத்தி செய்த பொருட்களில் 30 மில்லியன் பெறுமதியான பொருட்களை தனியார் நிறுவனங்களுக்கும் 9 மில்லியன் பெறுமதியான பொருட்களை பனை அபிவிருத்தி சபைக்கு விற்பனை செய்துள்ளனர்.

அத்துடன், தற்போது காலநிலைச் சீரின்மையினால் பனைசார் உற்பத்திகள் குறைவடைந்துள்ளதாகவும், பனங்கழி மற்றும் ஒடியல் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக' அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .