2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு 468,425 ரூபா தண்டம்

Super User   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்;ட விலைக்கு அதிகமாக பொருட்கள்  ஆகியவற்நை விற்பனை செய்த வர்த்தகர்களிடமிருந்து 468,425 ரூபா நீதிமன்றங்களினால் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் ஐந்து நீதிமன்ற எல்லைக்குட்ப்பட்ட பிரதேசங்களில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர் என அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, பருத்தித்துறை நீதிமன்றினால் 423,000 ரூபாவும், மல்லாகம் நீதிமன்றினால் 4,500 ரூபாவும், யாழ். நீதிமன்றினால் 17,000 ரூபாவும், சாவகச்சேரி நீதிமன்றினால் 25,500 ரூபாவும் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .