2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். மாநகர சபையின் கட்டிட நிர்மாணத்திற்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Super User   / 2013 ஏப்ரல் 24 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாநகர சபையின் புதிய கட்டிட நிர்மாணத்திற்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் இன்று யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி நான்கு கட்டங்களாக வழங்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் பழைய இடத்திலேயே புதிய கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக  அவர் மேலும் கூறினார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .