2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கசிப்பு உற்பத்தி உபகரணங்களை வைத்திருந்தவருக்கு 115000 தண்டம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகருக்கு அண்மித்த பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தேவையான பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வைத்திருந்த வயோதிபர் ஒருவருக்கு 1,15,000 ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று (12) உத்தரவிட்டார்.

60 வயதுடைய மேற்படி வயோபதிபர், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 10 லீற்றர் கோடா, உற்பத்திக்கான உபகரணங்கள் மற்றும் 750 மில்லிலீற்றர் கசிப்பு ஆகியவற்றினை தனது உடமையில் வைத்திருந்த போது, கிளிநொச்சி பொலிஸாரினால் நேற்று முன்தினம் (10) கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து மேற்படி நபர் இன்று (12) நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .