2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சங்கானை மதுவரி நிலைய பகுதியில் 180 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 26 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

சங்கானை மதுவரி நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 180 மதுவரி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கானை மதுவரி நிலய பொறுப்பதிகாரி த.நந்தகுமார் இன்று புதன்கிழமை கூறினார்.

அந்தவகையில், ஓகஸ்ட் மாதம் காலப்பகுதியில் காரைநகர் மற்றம் சண்டிலிப்பாய், மாதகல் போன்ற பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 180 பேருக்கு எதிராக வழக்குகள் தொடர்ப்பட்டுள்ளன என்றார்.

இவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை மற்றம் மல்லாகம் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் இவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 51 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X