2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழில் சிறு குற்றம் புரிந்த 210 பேர் கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 210 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். குற்றவியல் தடுப்பு பொலிஸ் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் றொசான் பீரிஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச்செயல்களின் பிரகாரம்,
யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 29 பேரும், அடித்து காயம் ஏற்படுத்தியவர்கள் 18 பேரும், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவர்கள் 43 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 12பேரும், திருடிய குற்றச்சாட்டில் 04 பேரும், வீதி விபத்து காரணமானவர்கள் 03 பேரும், சட்டவிரோத மணல் ஏற்றியவர்கள் 23 பேரும், பொது இடத்தில் மது அருந்தியவர்கள் 02 பேரும், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தவர்கள்; 02பேரும், சொத்து சேதம் ஏற்படுத்திய ஒருவரும், பாரிய குற்றம் புரிந்த 02பேரும், சிறுகுற்றம் புரிந்தவர்கள் 24 பேரும், பண மோசடியில் ஈடுபட்டவர்கள் 02 பேரும், பொதுமக்கள் செல்வதற்கு வீதியில் தடை விதித்தவர்கள் 02 பேரும், ஏனைய குற்றங்கள் புரிந்தவர்கள் 43 பேருமாக 210 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .